ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு முபல்லிகா & ஹாபிழா சகீரா, இரண்டாம் ஆண்டு காரிஆ, மூன்றாம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா, நான்காம் ஆண்டு மதரஸா ஆண்டு விழா வருகிற பிப்.24,25 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் மதரஸா ஆண்டு விழா 24.02.2024 சனிக்கிழமை முதல் அமர்வு காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மாணவ, மாணவியரின் கிராஅத், பயான், ஹதீஸ், கேள்வி-பதில், துஆக்கள் நிகழ்ச்சி மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசல் ரஹுமா பரக்கத் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இரண்டாம் அமர்வாக பெண்கள் மட்டும் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வு மாலை 3.00 மணி முதல் மக்ரிபு வரை முபல்லிகா, முஅல்லமா, காரிஆ சனது பெரும் மாணவிகளின் கிராஅத், பயான் மற்றும் கருத்தரங்கம் மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசல் ரஹுமா பரக்கத் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இரண்டாம் நாள் அமர்வாக 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் முபல்லிகா, முஅல்லமா, காரிஆ, ஹாபிழா சகீரா பட்டமளிப்பு விழா மதரஸா நிறுவனர் N.S.அயூப்கான் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மதுரை மாத்தூர் ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸாவின் முதல்வர் மௌலவி S.முஹம்மது ஷகீல் தாவூதி அவர்கள் சனது வழங்கி சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
இந்த ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு ரஹுமா பரக்கத் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.