புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் அளவீடு பணிகள் தொடங்கப்பட்டது. அழியாநிலை முதல் கூத்தாடிவயல், ரெத்தினக்கோட்டை, வைரிவயல், பள்ளத்திவயல் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள், மக்களை அழைத்து தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அறந்தாங்கி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன் முன்னிலை வகித்தார். அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை கூறினர். அதற்கு அதிகாரிகள் மீண்டும் அளவீடு செய்து மாற்று வழிகளில் ஏற்பாடு செய்ய முடியுமா என மேலிடத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகள் தற்காலிகமாக சமரசம் அடைந்து அங்கிருந்து சென்றனர். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் சுபாஷினி மற்றும் துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.