மணப்பாறை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
விவசாய தொழிலாளி
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா சித்தாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் தனது தங்கைக்கு செட்டிசத்திரம் கிராமத்தில் 1,200 சதுரஅடி காலிமனை வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக அவர் காலிமனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
இதைத்தொடர்ந்து சித்தாநத்தம் கிராம நிர்வாக அதிகாரி சிவ செல்வகுமார் (வயது 41) தொலைபேசி மூலம் வையாபுரியை அழைத்து பட்டா பெயர் மாற்றத்துக்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ரூ.1,000 லஞ்சம்
அதன்படி வையாபுரி கடந்த 1-ந்தேதி பட்டா பெயர் மாற்றத்துக்கு தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர், வையாபுரி அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி சிவசெல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்தார்.
இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த சிவசெல்வகுமார் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்ய உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி, தான் விவசாய கூலி வேலை செய்து வருவதாக கூறியதால் ரூ.1,000 கேட்டுள்ளார்.
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோரது ஆலோசனையின் பேரில் வையாபுரி ரசாயன பவுடர் தடவப்பட்ட ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் கிராம நிர்வாக அதிகாரி சிவசெல்வகுமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.