நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




​புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கூடுதல் வாடகை வசூலிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திருமதி. மு. அருணா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் முத்தரப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி அறுவடை இயந்திரங்களுக்கான மணி நேர வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

​நிர்ணயிக்கப்பட்ட வாடகை விவரம்

தனியார் இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வாடகை விகிதங்கள் பின்வருமாறு:

  • பெல்ட் வகை இயந்திரங்கள்: ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2,600/-
  • டயர் வகை இயந்திரங்கள்: ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,900/-

​அரசு இயந்திரங்கள்

​வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் சக்கர வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எச்சரிக்கை

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வாடகை வசூல் செய்யும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தனியார் இயந்திர உரிமையாளர்களின் தொலைபேசி எண்கள் 'உழவன்' (Uzhavan) செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு

விவசாயிகள் மேலும் விவரங்கள் பெற வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments