பட்டுக்கோட்டை ெரயில் நிலையத்தில் ரூ.7 கோடியில் சரக்கு முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சரக்கு முனையம்
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட சரக்கு கிடங்கை (சரக்கு முனையம்) காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை திறந்து வைத்தார்.
இதையொட்டி பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி சீனியர் டிவிஷனல் பாதுகாப்பு அதிகாரி சரவணன், அண்ணாதுரை எம்.எல்.ஏ. , நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார், ஐகோர்ட்டு வக்கீல் முரளி கணேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தீபக்பாபீர்வால், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கம்பன் விரைவு ரெயில்
முன்னதாக பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், திருச்சி சீனியர் டிவிஷனல் பாதுகாப்பு அதிகாரி சரவணனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு கம்பன் விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதிராம்பட்டினம், பேராவூரணி ரெயில் நிலையங்களில் நடை மேடையை நீட்டித்து, தாம்பரம்- செங்கோட்டை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.