மாநகராட்சியில் இணைக்க எதிா்ப்பு ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்




புதுக்கோட்டை நகராட்சியுடன் சுற்றுப்பகுதியிலுள்ள ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மேட்டுப்பட்டியில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்தி முதல்வா் ஸ்டாலின் அண்மையில் அறிவித்துள்ளாா். மாநகராட்சியோடு தங்களின் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருமலைராயசமுத்திரம் மற்றும் திருக்கட்டளை ஆகிய 2 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் மேட்டுப்பட்டியில் திங்களகிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்குவது பாதிக்கப்படும் என்றும், மாநகராட்சிக்கான வரிகள் கூடுதலாக இருக்கும் என்றும் அந்த மக்கள் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினா். சிறிதுநேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments