ஆலங்குடியில் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு




ஆலங்குடி தாலுகாவில் ஆயிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிப்பட்டியிலிருந்து மேலக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை இணைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையை இணைக்க வலியுறுத்தி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஆயிப்பட்டி கிராமமக்கள் அந்த வழியாகத்தான் ஆண்டாண்டு காலமாக குப்பகுடி சென்று தேர்தல் நேரத்தில் வாக்கு செலுத்தி வருகின்றனர். எனவே இணைப்பு சாலையை இணைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் ஆயிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வளைவில் பொதுமக்கள் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments