விழிப்புணர்வு ஊர்வலம்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணாசிலையில் இருந்து கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூவர்ண நிறத்திலான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் புதுநகர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், பெண்கள் ஆகியோர் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி செய்திருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.