அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டியில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 36 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், நடுமாடு போய் வர 6 மைல் தூரமும், கரிச்சான் மாடு போய் வர 4 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரிசு

பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 20 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடி நின்ற பொதுமக்கள் கைதட்டி, விசில் அடித்து உற்சாகப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு வெள்ளி தார் கம்பு, கேடயம், ரொக்கம், கொடிப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறமும் ரசிகர்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments