கோபாலப்பட்டிணத்தில் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி




கோபாலப்பட்டிணத்தில்  முஸ்லிம் ஜமாஅத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். நோன்பு திறக்கும் நேரத்தில் இப்தார் நிகழ்ச்சி பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய சமூக நல்லிணக்க நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி 25-03-2024 திங்கட்கிழமை  நடைபெற்றது..

இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP கலந்து கொண்டார்.
 
மேலும் கோபாலப்பட்டிணம் ஜமாத் பொறுப்பாளர்கள் ஊராட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் , பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments