மீமிசல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக, வாரச்சந்தை கடைகள் பேருந்து நிலையத்திற்கு வெளியே பிரதான சாலையில் அமைக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மீமிசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் வாரச்சந்தை, வழக்கமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதியில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், நேற்று (புதன்கிழமை) பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை பேருந்து நிலையத்திற்கு வெளியேயும், பிரதான சாலையோரங்களிலும் அமைத்திருந்தனர்.
பேருந்துகள் செல்ல முடியாத அவலம்
சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் சாலையிலேயே இறங்கி நடக்க வேண்டிய சூழ்நிலை உருவானதுடன், அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், "வாரச்சந்தை கடைகளை முறைப்படுத்தி, பேருந்து நிலையத்தின் உள்ளே மட்டுமே அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காவல்துறையினரும், உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.