ராமநாதபுரத்தில் O.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்




ராமநாதபுரத்தில் O.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்

ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் இதுவரை 5 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் 

இந்த நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

மேலும் உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்

இந்நிலையில் இன்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம்.  தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் நிற்கும் நிலையில் அதே பெயரைக் கொண்ட 5 நபர்கள் இதுவரை வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை வரை இருப்பதால், இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ தெரியவில்லை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments