ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ரயில் சேவை கிடைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலைய மேம்பாடு, ரயில் பாலம், உள்ளிட்ட ரூ. 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந் நிகழ்ச்சி ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் காணொலி காட்சியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்ற நவாஸ்கனி எம்.பி., பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக தொடர்ந்து மத்திய அரசையும், ரயில்வே துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறேன்.
ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக ரயில் பாதை உள்ளது.
அதே போல் காரைக்குடியில் இருந்து துாத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில் இயக்கினால் காரைக்குடி, தொண்டி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் முழுமையாக ரயில் சேவை கிடைக்கும். வர்த்தகர்கள் பயன் பெறுவார்கள். கொரோனாவுக்கு முன் ரயில்கள் நின்று சென்ற நிலையங்களில் தற்போது நிற்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இதனையும் மத்திய அரசு சரி செய்ய வேண்டும்.
பகல் நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.