கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த கொலை செய்யப்பட்ட நெய்னா முகமது குடும்பத்திற்கு ஆறுதல் கூற வருகை தர உள்ள தமுமுக மாநில செயலாளர், தமுமுக தலைமை பிரதி நிதி!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  கோபாலபட்டினத்தை சேர்ந்த நைனாமுகமது என்பவர் கடந்த 22.04.24 திங்கட்கிழமை அன்று  மீமிசலில் உள்ள தனது கடையினை அடைத்துவிட்டு இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்லும் போது கோபாலபட்டினம் ஸ்டேட் பேங் சாலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யபட்டுள்ள நைனா முகமது குடும்பத்தினர்கு ஆறுதல் கூறவும், கொலை குற்றாவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்த காவல்துறை அதிகாரிகளை சந்திக்க இன்று 26.04.24 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மற்றும் தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் வருகை தர உள்ளனர்.

எனவே மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments