புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.
இவர் 22.04.2024 திங்கட்கிழமை அன்று இரவு 11.30 மணி அளவில் கடை அடைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுது கோபாலப்பட்டினம் பிராதன சாலையான மீமிசல் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த கும்பல் அவரை வழிமறித்து ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எனவே 25-04-2024 வியாழக்கிழமை இன்று கொலை செய்யப்பட்ட நெய்னா முகமது அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து,கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி மீமிசல் காவல் நிலையத்திற்கு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சனிக்கிழமைக்குள் குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தனர்.ஒருவேளை குற்றவாளிகளை கைது செய்யாமலோ நடவடிக்கை தாமதப்படுத்தினாலோ பொதுமக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக முறையிடப்பட்டது இதில் *மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ.ஹூமாயுன் கபீர் அவர்கள்* மற்றும் நமது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
*_தொடர்புக்கு:_*
*வேங்கை பழனி*
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி செயலாளர்
*📞:9597046667*
*அப்பாசாமி*
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தலைவர்
*📞:9787123770*
*முகமது இபுராகிம்*
அறந்தாங்கி சட்டமன்ற முன்னாள் தொகுதி செயலாளர்
*📞:9566654904*
*அலி அக்பர்*
ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றிய தலைவர்
*📞:9976077262*
*_செய்தி வெளியீடு:_*
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.