புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாலை விரிவாக்க பணியை உடனே தொடங்க வலியுறுத்தி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பட்டா நிலத்தில் விரிவாக்கம் செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனே சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினா் மூலம் அளவீடு செய்து பின்னா் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் , திங்கள்கிழமை வருவாய்த் துறையினா் சாலையை அளவிடும் பணியை தொடங்கிய சிறுது நேரத்தில் அளவீடு செய்யும் கருவியில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி அளவிடும் பணியை நிறுத்தினா். இதைக்கண்டித்தும், உடனே சாலையை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, கொத்தமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், கீரமங்கலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.