பள்ளிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கின




பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கின.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்பின் மற்ற வகுப்பினருக்கும் ஆண்டு தேர்வு நடைபெறும். அதன்பின் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். விடுமுறையை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்படும். இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டைக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வரத்தொடங்கியுள்ளன.

பாடப்புத்தகங்கள்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் படிப்படியாக வருகிறது. இந்த மாதம் முடிவிற்குள் அனைத்து பாடப்புத்தகங்களும் வந்து விடும் எனவும், அதன்பிறகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments