பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்பின் மற்ற வகுப்பினருக்கும் ஆண்டு தேர்வு நடைபெறும். அதன்பின் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். விடுமுறையை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்படும். இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டைக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வரத்தொடங்கியுள்ளன.
பாடப்புத்தகங்கள்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் படிப்படியாக வருகிறது. இந்த மாதம் முடிவிற்குள் அனைத்து பாடப்புத்தகங்களும் வந்து விடும் எனவும், அதன்பிறகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.