நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் புதுக்கோட்டைமாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை




நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

8-ந் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி முதல் வருகிற 9-ந் தேதி வரை பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

தேர்வுகள் நடைபெறும்

மேலும் கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டியே அறிவித்தபடி நடைபெறும். அத்தியாவசிய பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.

மேலும் உள்ளூர் விடுமுறை நாளான 8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும், அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments