செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை   நீட்டிக்கப்பட்டுள்ளது.




செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695) 
வாராந்திர  சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி,  வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.


இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண் 07696) .வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு   காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 

எங்கெங்கு நின்று செல்லும் ?

செகந்திராபாத்  (ஹைதராபாத்)
நலகொண்டா, 
மிரியால்குடா, 
சட்டெனப்பள்ளி, 
குண்டூர் ,
தெனாலி, 
பாபட்லா, 
ஓங்கோல்,  
கவாலி ,
நெல்லூர் 
கூடுர்,
சென்னை எழும்பூர், 
செங்கல்பட்டு, 
விழுப்புரம், 
திருப்பாதிரிபூலியூர் (கடலூர்),
சிதம்பரம், 
சீர்காழி, 
மயிலாடுதுறை, 
திருவாரூர், 
திருத்துறைப்பூண்டி, 
முத்துப்பேட்டை,
அதிராம்பட்டினம், 
பட்டுக்கோட்டை, 
அறந்தாங்கி, 
காரைக்குடி, 
சிவகங்கை, 
மானாமதுரை, 
இராமநாதபுரம்,  

ஆகிய ரயில் நிலையங்களில் 
நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் 

நிர்வாக காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சிறப்பு விரைவு ர‌யி‌ல் மீண்டும் இயங்க உள்ளது.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி ரயில் வழித்தடத்தில் வண்டி எண் 07695 /07696 செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இம்மாதம் 10,17,24 ஆகிய தேதிகளில் செகந்திராபாத் நிலையத்தில் இருந்தும் 12,19,26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட  உள்ளது.  இந்த சிறப்பு விரைவு ரயில் சேவையில் தற்போது பெட்டிகள் தொகுப்பு மாற்றப்பட்டு 18 தூங்கும் வசதி பெட்டிகள், 1 குளிர் சாதன வகுப்பு பெட்டி இரண்டு பொதுப்பெட்டிகள் இரண்டு சரக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகள் /பெண்கள் பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் கொண்ட தொடராக இயக்கப்பட உள்ளது. விரைவில் நிரந்தர சேவையாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 செகந்திராபாத் - ராமநாதபுரம் இரயில் 
18 -சாதாரண படுக்கை வசதி (SLEEPER ) பெட்டிகள் 
4 -பொதுப்பெட்டிகள் (GENERAL COACH)
1 - முதல் வகுப்புடன் கூடிய இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டி
என 23 பெட்டிகளுடன் இயங்கும்..

குறிப்பு: இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments