கோபாலப்பட்டிணம் நைனா முகம்மது கொலைக்கு நீதி வேண்டும்: மஜக கோரிக்கை!





புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம்  நைனா முகம்மதுவை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி  கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் தனது அறிக்கையில் கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் குலாம் ரசூல் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் பழச்சாறு கடை நடத்தி வந்தார்.கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற நைனா முகம்மது நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட படுகொலையாகத் தெரிகிறது. 

இச்சம்பவம் மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நைனா முகம்மதின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை படுகொலை செய்த குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments