கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க, TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வருகை.




புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோ.நெய்னா முகமது அவர்கள் கடந்த 22.04.2024 திங்கள் இரவு பின்னேரம் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலை சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. 
படுகொலை செய்யப்பட்ட சகோ.நெய்னா முகமது அவர்களின், குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறவும், உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தவும், 

TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள், இன்ஷா அல்லாஹ் 27.04.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், கோபாலப்பட்டினம் வருகை தந்து, பத்திரிக்கைச் சந்திப்பும் நடத்த இருக்கிறார்கள்.

எனவே, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

பி.முஹம்மது மீரான்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562683, 8110987802

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments