அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் 12-ஆம் வகுப்பு தேர்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகமது இப்ராஹீம் என்ற மாணவன் முதலிடத்தை பிடித்தார்.
கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மரக்கடை தாஜிதீன் பேரனும், SRM. சேகு பரிது பேரனும் மரக்கடை சாதிக் பாட்சா அவர்களின் மகனுமாகிய முகமது இப்ராஹீம் என்ற மாணவன் 578/600 எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், இயற்பியல் படத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், பல சாதனைகளை படைத்திட GPM மீடியா குழு சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.
இந்த தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்று ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் BIO MATHS பாடப்பிரிவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மென்மேலும் கல்வி பணியில் சிறந்து விளங்கிடவும், பல சாதனைகளை படைத்திட GPM மீடியா குழு சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.