கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாஅத் நிர்வாகம் அமைப்பது குறித்து அல்வின்னர் சங்கம். (கோபாலப்பட்டிணம் ஒருங்கிணைந்த வியாபாரிகள் கூட்டமைப்பு , கும்பகோணம்) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாஅத் நிர்வாகம் அமைப்பது குறித்து அல்வின்னர் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அல் வின்னர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

கண்ணியமிக்க கோபாலபட்டினம் ஜமாத் நிர்வாகிகளுக்கும் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அல்வின்னர் வர்த்தக சங்கத்தின் கனிவான சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தமது ஊர் கோபாலபட்டினத்தில் கடந்த 03-05-2024ம் தேதி வெள்ளிக்கிழை அன்று ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 17-05-2024 வெள்ளிக்கிழை அன்று புதிய ஜமாத் நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அது சமயம் அல்வின்னர் வர்த்தக சங்கம் கலந்து கொண்டு புதிய நிர்வாகம் அமைத்து தருமாறு அழைப்பு விடுத்தீர்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர்

அது தொடர்பாக அல்வின்னர் வர்த்தக சங்க ஆலோசணைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்து. தற்போதுள்ள கோபாலபட்டினம் ஜமாத் நிர்வாகத்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 20ந் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் வருகின்ற ஹஜ்ஜுப் பெருநாளைக்கு பிறகு புதிய நிர்வாகத்ததை தேர்வு செய்யலாம் என கோபாலபட்டிணம் ஜமாத்தார்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் அல்வின்ளர் வர்த்தக சங்கம் பரிந்துரை செய்கின்றது.

மீண்டும் அனைவருக்கும் கணிவான சலாத்துடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments