கோபாலபட்டிணத்தில் உலுக்கிய கொலை வழக்கு : குற்றவாளிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்த சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசல் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 22-ந் தேதி வழக்கம்போல் கடைக்கு சென்ற அவர், இரவில் வீட்டிற்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் அவ்வழியே சென்றவர் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு நைனா முகமது அடிபட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.
அப்போது அவர் கோபாலப்பட்டிணம் முக்கிய சாலையில் தலையில் காயத்துடன் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீமிசல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் நைனா முகமது அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், எனவே இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது மனைவி ரம்ஜானியா மீமிசல் போலீசில் புகார் அளித்தார். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அத்துடன் நைனா முகமதுவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 25-ந் தேதி நைனா முகமதுவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நைனா முகமதுவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது உடலை பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் மீமிசல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது.
இதனையடுத்து நைனா முகமதுவின் உறவினர்கள் உடலை வாங்கி அடக்கம் செய்ய சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 30-04-2024 திங்கட்கிழமை காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சுமார் மதியம் 3.00 மணியளவில் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு சில நிமிடங்கள் உறவினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பிறகு பள்ளிவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டு தொழுகை நடத்தப்பட்டு கோபாலப்பட்டிணம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மீமிசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலபட்டினத்தில் பதிவான கொலை வழக்கில் கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு தனி படை குற்றவாளிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்தது செயல்பட்டமைக்காக கோட்டைப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்ட தருணம் குற்றவாளிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்த சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.