அம்மாப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மீன் வியாபாரி சாவு




ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாலை பகுதியை சேர்ந்தவர் நாகூரான் மகன் சரவணன் (வயது 22). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை ஏலத்தில் எடுத்துக் கொண்டு கட்டுமாவடியில் விற்பனை செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அம்மாப்பட்டினம் அருகே வந்த போது, அப்பகுதியை சேர்ந்த மணிமுத்து என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், சரவணன் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சரவணன், மணி முத்துவுக்கு காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments