எஸ்.பி.பட்டினம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி




திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரம்-புதுக்கோட்டை மாவட்டங்கள் இணையும் ஏனாதி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நேற்று அதிகாலை பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments