பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணி அனுமதிக்காக காத்திருப்பு




பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்க அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

பொற்பனைக்கோட்டை

புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்ககாலத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி முதற்கட்டமாக கடந்த ஆண்டில் (2023) மே மாதம் தொடங்கியது.

இதில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் துறையினர் குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்டனர். இதில் தங்க அணிகலன்கள், வட்ட சில்லுக்கள், கண்ணாடி மணிகள், படிக கல் மணிகள், சுடுமண் விளக்கு, எலும்பு முனை கருவி, இரும்பிலான பொருட்கள், செங்கல் கட்டுமான நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதனை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது. முதற்கட்ட அகழாய்வு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.

2-ம் கட்ட அகழாய்வு

இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக இடம் தேர்வு மற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அகழாய்வு பணிக்கான உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனுமதி வந்ததும் 2-ம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கலாம். இதனால் அனுமதிக்காக காத்திருப்பதாக தொல்லியல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments