சென்னை விமான நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் முகத்தை அடையாளம் காணும் கருவியை, விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார்.
முகத்தை அடையாளம் காணும் கருவி
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும். இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.
டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
சென்னையில் தொடங்கியது
இந்த திட்டத்தை சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்த மத்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் டிஜி யாத்ரா வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தனி பாதை மற்றும் முகம் காட்டும் கருவியை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார்.
இதில் மண்டல இயக்குனர் சுகுனா சிங், மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. அருண் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டிஜி யாத்ரா திட்டம் தொடங்கப்பட்டாலும் விமான நிலையங்களில் உள்ள வழக்கமான நடைமுறையும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.