திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் யாசர்( வயது 27), உமர்(25), ஷாஜகான்(30). இவர்கள் 3 பேரும் அதிராம்பட்டினத்தில் உள்ள மார்க்கெட்டிலிருந்து இறால்களை சரக்கு வேன் மூலம் நேற்று மாலை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் பாலத்தை கடந்து சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 3 பேரும் காயமடைந்தனர். மேலும் வேனில் இருந்த 200 கிலோ இறால்கள் சாலையில் கொட்டி சிதறியது. பின்னர் காயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.