ஆள் உயர கடல் விரால்
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, திருக்கை, முரள், கிளாத்தி உள்ளிட்ட பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு விசைப்படகில் சுமார் 70 கிலோ எடையில் ஆள் உயர கடல் விரால் மீன் சிக்கி இருந்தது. அதுபோல் 30 கிலோ மற்றும் 20 கிலோ எடையில், அதைவிட சிறிய அளவிலான கடல் விரால் மீன்களும் சிக்கி இருந்தன. இதே போல் மீனவர் வலையில், யானை திருக்கை மீனும் சிக்கி இருந்தது.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு
இது குறித்து விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறும்போது, “கடல் விரால் மீன்கள் மிகவும் ஆழ்கடல் பகுதியில்தான் கிடைக்கும். சிறிய வகை கடல் விரால் மீன்கள் சாதாரணமாக கிடைக்கும். 40 கிலோவுக்கு மேல் பெரிய கடல் விரால் மீன் கிடைப்பது மிகவும் அரிதுதான். தற்போது கடல் விரால் மீன் ஒரு கிலோ ரூ.420-க்கு விலை போகிறது. இந்த வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய வகை கடல் விரால் என்றால் விலை அதிகம். பெரிய வகை மீனுக்கு விலை சற்று குறைவுதான்,” என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.