சேதுபாவாசத்திரம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது சூறாவளி காற்றில் படகு கவிழ்ந்து கடலில் மீனவர் மூழ்கி உயிரிழந்தார்.
படகு கவிழ்ந்து கடலில் மூழ்கினார்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, சுப்பம்மாள்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜினி முகமது (வயது 55) மீனவர். இவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் காமராஜ் ( 30) என்பவருடன் கடந்த 10-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த 10-ந்தேதி இரவு கடலில் திடீரென வீசிய சூறாவளி காற்றில் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் கஜினி முகமது, காமராஜ் ஆகிய 2 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
வலையில் சிக்கிய மீனவர் உடல்
பின்னர் மீனவர் காமராஜ் மட்டும் நீந்திச் சென்று, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் படகில் ஏறி உள்ளார். இதை தொடர்ந்து அவர், மற்ற மீனவர்களுடன் படகு கவிழ்ந்த இடத்துக்கு வந்து பார்த்த போது கஜினி முகமதுவை காணவில்லை. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து மீன்வளத்துறை, கடலோர காவல் படை, வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்நேற்று முன்தினம் காலை கடலோர காவல் படை அதிகாரிகள் படகில் சென்று கடலில் கஜினி முகமதுவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் கஜினி முகமது உடல் சிக்கி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் அங்கு சென்று மீனவர் கஜினி முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக கடலோரக் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மீனவர் கஜினி முகமதுவுக்கு பரிதா (45) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.