மணமேல்குடி ஒன்றியத்தில் பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.
இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி பத்மா தேவி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜெகதீஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார்
இந்நிகழ்வில் பட்டங்காடு குடியிருப்பில் பள்ளிச் செல்லா குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதேபோல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முதல் வகுப்பில் 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வின் முடிவில் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு செபஸ்தியான் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.