3 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல்








ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா புல்லூர் கிராமம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ்க்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் உத்தரவிட்டதன் பேரில் திருவாடானை போலீஸ் துணை சரக குற்றப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தின் டிரைவரான காரைக்குடி புதுவயல் கல்லூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (வயது 50) என்பவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் டிரைவரையும் ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் காரைக்குடி புதுவயல் கல்லூர் பாண்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments