சென்னை அண்ணாசாலையில் காயிதே மில்லத் கல்லூரி அருகே மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகளை வழங்க மக்களுக்கு உதவும்விதமாக, `மே ஐ ஹெல்ப் யூ' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகள்குறித்த வழிகாட்டுதல்களை பெறுவதுடன், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புவது, பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அலுவலத்துக்கு நேரில் வர வேண்டிய நேரம் ஆகியவை தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறலாம்.
044–28513639 / 28513640 ஆகியதொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். தங்களது கேள்விகளை வாட்ஸ்-அப் செயலியில் 917305330666 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைகள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும்.
இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கூறியுள்ளதாவது: பாஸ்போர்ட் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், அவற்றை விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே நிரப்பலாம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.passportindia.gov.in ஆகும். மேலும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பிஎஸ்பி பிரிவின் ‘mPassport Seva’ என்ற அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த ஆவணங்களையோ அல்லது ரகசியமான தகவல்களையோ இடைத்தரகர்கள், முகவர்களிடம் தெரிவிக்க வேண்டாம்.
இந்த `மே ஐ ஹெல்ப் யூ' முன்முயற்சி மூலம் மக்கள் தங்களது அடிப்படை கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி பதில் பெறலாம். மேலும், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பொறியில் சிக்காமல் தடுக்க இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.