டிராகன் பழம் மற்றும் முந்திரி சாகுபடிக்கு மானியம் கிடைப்பதாக தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டிராகன் செடிகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டிராகன் பழம் மற்றும் முந்திரி சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. டிராகன் பழம் ஒரு கள்ளி வகை பழப்பயிர், மருத்துவ குணம் கொண்ட இப்பயிர் குறைந்தளவு தண்ணீரில் அதிக லாபம் தரக்கூடியது.
அறந்தாங்கி வட்டார தோட்டக்கலை துறையின் மூலம் டிராகன் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் டிராகன் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு எக்ேடருக்கு ரூ.96 ஆயிரம் மானியத்தில் டிராகன் செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மானியம்
அறந்தாங்கி வட்டாரத்தில் புதிதாக முந்திரி விவசாயம் செய்ய உள்ள விவசாயிகளுக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் முந்திரி பரப்பு விரிவாக்க இனத்தின் மூலம் எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியத்தில் முந்திரி ஒட்டு செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9578770294, 8940656492 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.