கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் நியமனம்!



கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரிய குளமாக நெடுங்குளம் உள்ளது. இந்நிலையில் நெடுங்குளத்திற்கு மழைக்காலங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாய்க்கால் அனைத்தும் அடைப்பட்டுவிட்டதால் குளத்தில் தண்ணீர் குறைந்த அளவே இருந்து வருகிறது. இதையடுத்து நெடுங்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுமார் 1080 அடியில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் புதிதாக ஆழ்துளை கிணறு (போர்) அமைக்க புதிய நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.

அதனடிப்படையில் கடந்த 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நெடுங்குளம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கண்காணிப்பதும், நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட நபர்களை இன்று 26/07/2024 வெள்ளிகிழமை நடைபெற்ற மகாசபையில் பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

1.ஹாஜி.RSM.முகம்மது அன்சார்
2.J.முகம்மது யூசுப்
3. M. முகம்மது மீராசா
4. M. ராஜா முகம்மது
5. KYN. சேக்காதி ராவுத்தர்

இவர்கள் ஐந்து நபர்களும் கமிட்டியாளர்களாக செயல்படுவார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments