பேராவூரணி - அதிராம்பட்டினம் & பேராவூரணி - நாகப்பட்டினம் இடையே புதிய பேருந்துகள் இயக்கம் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்




தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில், புதிய 2 பேருந்துகள் இயக்கத்தை பேராவூரணி  சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினம் செல்லும் வழித்தடம் ஏ1 மற்றும் பேராவூரணியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழித்தடம் 428 ஜி ஆகிய இரண்டு வழித்தடத்திலும் இயக்குவதற்காக, அதி நவீன புதிய மாடல் பேருந்துகள் பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துக்கு பதிலாக தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்துகளின் இயக்கத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முத்துமாணிக்கம், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தாஜுதீன், அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மகாலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments