சாமி சிலைகள்
புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார் கோவில் தாலுகாவுக்குட்பட்ட நாட்டனி புரசக்குடி வருவாய்க்குட்பட்ட உப்பளம் அருகே மீமிசலில் சிறிய பள்ளத்தில் நேற்று 3 சாமி சிலைகள் கிடந்தன.
ஒரு சிலையில் ஊதா நிற பட்டு ஆடையால் சுற்றியவாறும், மற்ற 2 சிலைகளும் வெறுமென கிடந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அந்த 3 சாமி சிலைகளையும் கைப்பற்றினர்.
விசாரணை
கற்சிலைகளான அந்த சாமி சிலைகளில் 2 சிலைகள் கருப்புசாமியாகவும், ஒரு சிலை அம்மனாகவும் இருந்தது. அந்த சிலை எப்படி இங்கு வந்தது?, அதனை யாரேனும் கொண்டு வந்து வீசிச்சென்றனரா?, அவை எந்த கோவிலில் இருந்த சிலைகள்?, சிலைகளை கடத்தி வந்து வீசிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளை வருவாய்த்துறையினர் ஆவுடையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மீமிசலில் கேட்பாரற்று கிடந்த சாமி சிலைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.