அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் கடைகளின் கட்டிடம் சேதமடைந்துள்ளதால் கீழே விழும் நிலையில் உள்ளது. கடைகளுக்கு உள்ளே மழை ஒழுகுவதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்கு அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து நாள்தோறும் நூற்றுகணக்கான பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்க்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்க்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டு கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் கட்டி பல ஆண்டுகளை கடந்த விட்டது. இதனால் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை நேரத்தில் மழை தண்ணீர் கடைகளுக்கு உள்ளே வருகிறது. மேலும் பஸ் ஸ்டாண்டில் இருந்து பின்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சுவற்றில் அரசமரம் வளர்ந்து சுவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. தற்போது அறந்தாங்கி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கட்டங்களில் உள்ள விரிசல்களில் மழை தண்ணீர் தேங்கி கட்டடம் அடைந்து விழ வாய்ப்பு உள்ளதால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் கட்டடத்தில் உள்ள விரிசல்களையும் உடைந்துள்ள இடங்களை சரிசெய்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.