அறந்தாங்கி ரோட்டரி சார்பில் அரசு பள்ளிக்கு 50 ஆயிரம் செலவில் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாயக்கர் பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. 

சங்கத்தின் தலைவர் அப்துல் பாரி தலைமையில் துணை ஆளுநர் மருத்துவர் விஜய், பொருளாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலையில் இந்திய மருத்துவ கழகம் அறந்தாங்கி கிளை முன்னாள் தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன் 100 மாணவ மாணவியர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு சீருடைகளை வழங்கினார். 

தொடர்ந்து விளையாட்டு போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி அடைந்த மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு ஒன்றிய வார்டு கவுன்சிலர் ஜம்புலிங்கம் பரிசுகளை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருப்பையா வாழ்த்துரை வழங்கினார். ரோட்டரி நிர்வாகி ஏஎம் ராஜா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் அனைவரையும் வரவேற்றார் இறுதியில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்யா,ராஜேஸ்வரி, யாஸ்மின் ராணி, இலக்கியா ஆகியோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments