திறனாய்வு தேர்வு
அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தலா 500 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள் என இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். அந்த வகையில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது.
3,512 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 3,775 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு காலை மற்றும் மதியம் என முதல் தாள், 2-ம் தாள் என நடைபெற்றது. இதில் 3,512 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினர்.
263 பேர் தேர்வு எழுதவரவில்லை. முதல் தாள் தேர்வில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்களும், 2-ம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்களும் கொள்குறி வகையில் இடம்பெற்றிருந்தன. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.