முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு: புதுக்கோட்டையில் 3,512 மாணவர்கள் எழுதினர்




முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை புதுக்கோட்டையில் 3,512 பேர் எழுதினர்.

திறனாய்வு தேர்வு

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தலா 500 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள் என இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். அந்த வகையில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது.

3,512 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 3,775 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு காலை மற்றும் மதியம் என முதல் தாள், 2-ம் தாள் என நடைபெற்றது. இதில் 3,512 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினர்.

263 பேர் தேர்வு எழுதவரவில்லை. முதல் தாள் தேர்வில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்களும், 2-ம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்களும் கொள்குறி வகையில் இடம்பெற்றிருந்தன. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments