திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கீராளத்தூர், திருக்கொள்ளிக்காடு, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் யூசப் ரஹுமான் (வயது-28), என்பவரின் கைபேசிக்கு Part Time Job தொடர்பான Website Link வந்துள்ளது. அந்த Link-ல் சென்று பார்த்த போது அதில் Telegram Group-ல் இணைய ஒரு link வந்துள்ளது. அதில் சென்று பார்த்த போது வங்கி விபரங்களை பதிவிட கூறியதால் பதிவு செய்ததாகவும், அந்த நிறுவனத்தின் பெயர் Sky Scanner என வந்ததாகவும், அதிலிருந்து Task அனுப்பி Flight Ticket Rating கொடுக்க, பணம் செலுத்துமாறு கூறியதாகவும், தொடர்ந்து பல Task-களை அனுப்பி, Task முடித்தால் தான் பணம் கிடைக்கும் என கூறி பல தவணைகளில் ரூபாய்.13,79,516/-ஐ பெற்று மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் மேற்படி புகாரின் மீது வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு எதிரியை கைது செய்ய திருவாரூர் மாவட்ட Cyber Crime காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து புகர்தாரர் அளித்த எதிரிகளின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம், சூரத், வர்ச்சா ரோடு, மகாதேவ் நகரை சேர்ந்த சந்ரேஸ்பாய் ராவிஜிபு மகன் ஜெய் சவாளியா (வயது-24) மற்றும் அசோக் பாய் மகன் மில்லப் தாக்கர் (வயது-22) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு Online மூலம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த திருவாரூர் மாவட்ட Cyber Crime காவல் ஆய்வாளர் திருமதி.T.ஸ்ரீபிரியா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
தெரியாத நபர்கள் அனுப்பும் எந்தவொரு Link-களையும் தொட வேண்டாம், வங்கி விபரங்கள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான OTP-யை பிறருடன் பகிர கூடாதென்றும், பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் தெரிவித்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.