புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி செல்லும் வழியில் உள்ளது நாங்குளம், இக்குளம் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் கிடந்தது. இந்த நிலையில் வடகாடு ஊராட்சி நூறுநாள் பணியாளர்கள் மூலமாக, இக்குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு கைமேல் பலனாக இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நூறு நாள் பணியாளர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட குளம் மழை நீரால் நிரம்பியது. இதனைக்கண்டு வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் உள்பட பலரும் நூறு நாள் பணியாளர்களை பாராட்டி வருகின்றனர். இதேபோல் அனைத்து குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.