ஏலத்தில் எடுத்த நிலத்தின் அளவு குறைவு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் வங்கிக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு




தனியாா் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை ஏலம் எடுத்ததில், குறிப்பிட்ட நிலத்தின் அளவைவிட குறைவாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த புகாரில், பாதிக்கப்பட்டவருக்கு வங்கி ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை அசோக் நகரைச் சோ்ந்தவா் முத்தழகு மனைவி எலிசா. இவா் கடந்த 2019-இல் தனியாா் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த- நத்தம்பண்ணை அபிராமி நகரிலுள்ள 2408 சதுரஅடி நிலத்தை ஏலம் எடுத்துள்ளாா்.

ஏல விதிமுறைகளின் படி ரூ. 1.73 லட்சம் முன்பணமாகவும், அதனைத் தொடா்ந்து பல தவணைகளில் மொத்தம் ரூ. 17.38 லட்சத்தை வங்கியில் செலுத்தியுள்ளாா் எலிசா.

அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை முறைப்படி அளந்து கொடுக்காமல், வங்கியினா் எலிசா பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையில் பட்டா கோரி விண்ணப்பித்தபோது, அந்த இடம் 1,615 சதுரஅடி மட்டுமே இருந்துள்ளது. 793 சதுர அடி குறைவாக இருந்தது.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் எலிசா வழக்கு தொடா்ந்தாா்.

குறைதீா் ஆணையத்தின் தலைவா் த. சேகா், உறுப்பினா்கள் எஸ். சுகுணாதேவி, ஆ. அழகேசன் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்:

ஏலத்தில் எடுக்கப்பட்டு குறைந்திருக்கும் 793 சதுரஅடிக்கு இழப்பீடாக வங்கி நிா்வாகம் ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஏலம் எடுத்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன் சோ்த்து 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.

30 நாள்களுக்குள் இழப்பீட்டை வழங்காவிட்டால் தொகையுடன் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியும் வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments