ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதாக புகார் எழுந்தது. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொக்லைன் மூலம் அகற்றம்
மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அரசமணி உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று தாமரைக்குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொழிலாளர்கள் மூலம் மேற்கொண்டனர்.
இதில் குளத்தின் கரையின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.