புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அறந்தாங்கி அருகேயுள்ள எரிச்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் செந்தில் (40). இவா், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், சிலட்டூா் பகுதியில் சனிக்கிழமை செந்தில் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு மின்மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் செந்தில் உயிரிழந்தாா்.
தொடா்ந்து, அறந்தாங்கி போலீஸாா் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அழியாநிலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சிலட்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அலுவலா்களின் அலட்சியத்தினால் செந்தில் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை அருகே உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.