கோபாலப்பட்டினத்தில் நெடுங்குளத்தில் இருப்பு தண்ணீர் வெளியேற்றம்..!புதிய போர் தண்ணீர் வருகைக்காக காத்திருக்கும் கோபாலப்பட்டினம் மக்கள்!




கோபாலப்பட்டினத்தில் நெடுங்குளத்தில் இருப்பு தண்ணீர்  வெளியேற்றப்படுகிறது !புதிய போர் தண்ணீர்க்காக  கோபாலப்பட்டினம் மக்கள் காத்திருப்பு 

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

காட்டுக்குளம் - நெடுங்குளம்

கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் நெடுங்குளத்தை மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடம் ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2022 வருடம் இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2019 முதல் 2021 வருடங்களாக மழை காலத்தில் நன்றாக மழை பெய்தது. இதனால் குளங்கள் முழுவதும் நிரம்பின.

2023 மே மாதத்தில் ஒரு நாள் பெய்த பலத்த மழையால் காட்டுக்குளம் நிரம்பியது ஆனால் நெடுங்குளம் நிரம்பவில்லை

நெடுங்குளம் போர்

நெடுங்குளத்திற்கு மழை தண்ணீர் கண்மாய்கள் நிறைந்த பிறகு உபரி தண்ணீர் நெடுங்குளத்திற்கு வருவது வழக்கம் தற்போது குடியிருப்புகள் வந்துள்ளதால் இனி மழை தண்ணீர் வருவது சிரமம் இதை கருத்தில் கொண்டு தற்போது R.S.M அன்சாரி தலைமையிலான ஊர் ஜமாத் பொதுமக்கள் & அமைப்புகள் மூலம் நிதி திரட்டி சோலார் மூலம் இயங்கும் வகையில் புதிய போர் ஏற்பாடுகளை செய்து வருகிறது 

மழை காலத்தில் பெய்த கொஞ்சம் மழை இருப்பு தண்ணீர் நெடுங்குளத்தில் இருந்து வெளியேறி வருகிறது

சோலார் மூலம் தண்ணீர் விரைவில் நெடங்குளத்திற்கு விடப்படுகிறது 

எப்போது நெடுங்குளம்  நிறையும் என ஏக்கத்துடன் ஊர் மக்கள் உள்ளனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments