அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டதுஇதில் 150 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.
தூய்மைப்பணி
தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை சார்பில் உலக கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் ராஜன் தலைமை தாங்கினார். கடலியல் துறை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராம் கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசினார்.
திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலைய அலுவலர் சங்ல்ப் அகர்வால், தொண்டி கடற்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், கடலியல் துறை இணைபேராசிரியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக கடலியல் துறை மற்றும் மகளிர் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொண்டி கடற்கரையில் உள்ள கடலியல் துறை வளாகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கடற்கரை வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 150 கிலோ குப்பைகளை சேகரித்தனர். இதில் சுமார் 58 கிலோ பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விழிப்புணர்வு பேரணி
அதனைத் தொடர்ந்து கடற்கரை தூய்மை விழிப்புணர்வு பேரணி தொண்டி பஸ் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி கடலியல் துறை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மரைன் போலீசார், மீனவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கடலியல் துறை இணை பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.