புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள மடிக்கணினி உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கழிவறை வசதிகள் இல்லாமலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமலும் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஒக்கூர் கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்
இநநிலையில் ஆவுடையார் கோவில் அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து நாளை 23-ந் தேதி இரவு, பகலாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.