புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 போ் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, தனது ஜீப்பில் திருமயம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்டாா்.
திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள நகரத்துப்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கோட்டாட்சியரின் ஜீப் பலமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் கிராமத்திலுள்ள பள்ளிவாசலில் பணியாற்றி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது பயாஸ் (28), முகமது பாசில் (20) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநா் காமராஜுவும், லேசான காயமடைந்த கோட்டாட்சியரும் புதுக்கோட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஓட்டுநா் காமராஜுவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விபத்தால் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.